காஷ்மீர் மீதான காதல் இந்தியாவை ஆண்ட அனைத்து மன்னர்களுக்கும் இருந்தது…!
மௌரிய வம்சத்தின் அசோக சக்கரவர்த்தி தொடங்கி, காஷ்மீர் ஆக்கிரமிப்புகளும் கட்டப்பஞ்சாயத்துகளும் தொடர்ந்து வந்துள்ளன…
“பெண்மையின் நளினமும் ஆண்மையின் கம்பீரமும் இணைந்த பகுதி“ என காஷ்மீர் மீது மோகம் கொண்டவர் ஜவஹர்லால் நேரு.
ஒட்டுமொத்த காஷ்மீர் சமஸ்தானப் பகுதிகளில் இஸ்லாமியர்களே பெரும்பான்மையினர் ஆவர்.
வரலாற்று ரீதியாக இந்தியாவுடனான காஷ்மீர் இணைப்பு என்பது எத்தனையோ கட்டப்பஞ்சாயத்துகளையும் தாண்டி இன்று வரை கேள்விக்குறியாகவே தொடர்கிறது…!
காஷ்மீரின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவும், நீக்கமும் எழுப்பிய கேள்விகள் சர்ச்சைக்குரியவை. காஷ்மீர் மக்களுக்கும், இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளி தீர வரலாறு கவலை தோய்ந்தமுகத்தோடு இன்னும் எத்தனை காலம் அடைகாத்து வரவேண்டுமோ…?





Reviews
There are no reviews yet.