வேலு நாச்சியார், காளையார் கோவிலில் அன்று கண்ட காட்சி மிகக் கொடூரமானது… எங்கே பார்த்தாலும் பிணக்குவியல்… கோவில் திடலின் நடுவே முத்து வடுகநாத அரசரும், இளையராணியும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்…
ரத்த வெள்ளத்தில் கணவர் கிடந்த அந்த கொடூரக்காட்சியை நினைத்து வேலுநாச்சியார் கதறி அழுதார்…
நெஞ்சே வெடித்து விடும் போல நிலை குலைந்து போனார் ராணி. கணவரைக் கொன்ற மாகாதகர்களை பழி வாங்கியே தீர வேண்டும் என்று சபதம் ஏற்றார்.
பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கைச் சீமையில் தனது பரம்பரைச் சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது என்பதே அவரின் லட்சியமாக இருந்தது…!
வெள்ளையர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாராக அது பின்னர் வரலாற்றில் சுடரொளியாக்கியது…!





Reviews
There are no reviews yet.