இந்த நூற்றாண்டின் தமிழ்ச் சிறுகதை உலகில், அடையாளம் காட்டப்பட்ட சிறகதைச் சிற்பிகள் வரிசையில் திரு.ஜெகாதாவின் சிறகதைகளுக்கு எப்போதுமே ஒரு சிம்மாசனம் வாசகர் நெஞ்சில் இருந்துவருகிறது…
ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை நூல்கள் என பரந்த தளத்தில் எழுதிவரும் எழுத்துப் பட்டறைக்குச் சொந்தக்காரர் ஜெகாதா எனும் படைப்பாளி.
இவரது சிறுகதைகளை ஆய்வுசெய்து மூன்று ஆய்வாளர்கள் டாக்டர் பட்டமும், ஒன்பது ஆய்வாளர்கள் எம்.ஃபில்., பட்டமும் பெற்றுள்ளனர். இவரது படைப்பிலக்கியங்களுக்குப் பல்வேறு பல்கலைக் கழகங்களும் அங்கீகாரம் அளித்துள்ளன.
தமிழ்ச் செம்மல் விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கும் பாராட்டுகளுக்கும் உரியவர்.
ஏறத்தாழ நானூறு நூல்களுக்கு மேல் எழுதிய பெருமைக்குரியவர்.
விஜய், சன் தொலைக்காட்சிகள், சினிமா, வானொலி போன்ற ஊடகங்களில் இவரது பல தொடர்களும், படைப்புகளும் வலம் வந்துள்ளன.
வரா, மாத இதழிகளில் இவரது பல தொடர்கள் பெரும்பான்மை வாசகர்களின் நெஞ்சங்களை வசீகரித்துள்ளன.





Reviews
There are no reviews yet.