Skip to content

மஹதியின் சிறுகதைகள்

170.00

ஆசிரியர்: மஹதி

ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.

இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.

அறிஞர் அண்ணா¸ ப.ஜீவானந்தம்¸ பாரதிதாசன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவர்¸ பாரதிதாசனின் முதல் தொகுதி வெளிவரத் தூண்டுகோலாய் இருந்தார். மேலும்¸ அண்ணாவின் திராவிட நாடு ஏட்டுக்கும் பல வகையில் ஒத்துழைப்பத் தந்தவர்.

ருஷ்ய புரட்சி பற்றி தமிழில் முதல் நூல் எழுதிய மஹதி¸ மறைந்து கிடந்த தமிழக இஸ்லாமிய வரலாற்றுப் புதையலை அரும்பாடுபட்டு வெளிக்கொணர்ந்தார்.

ஐம்பதுகளில் இஸ்லாமியச் சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் எனப் போற்றப்படும் மஹதி¸ பல்வேறு இஸ்லாமிய இதழ்களில் எழுதிய சிறுகதைகளின் தொகுதி இது.

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “மஹதியின் சிறுகதைகள்”

Your email address will not be published. Required fields are marked *