Skip to content

பெண்கள் திலகம் பாத்திமா

45.00

மறை பெற்ற மாநபியின் மகளார் பாத்திமா(ரலி) அவர்கள். பெண்ணுலகில் தன்னிகரில்லாகவராய்த் திகழும் அவர்தம் பெயரை நன் நபியின் மீது நம்பிக்கை கொண்டவர்களில் எவருமே அறிந்திராதிருக்க முடியாது.

“பாத்திமா, என்னில் நின்றும் உள்ளவர், எனவே யார் பாத்திமாவை மகிழ்விக்கிறாரோ அவர் என்னை மகிழ்வித்தவராவார்” என்று அருள் நபியின் திரு நாவால் புகழப்பட்டவர்களாவார் பாத்திமா நாச்சியார். “சொர்க்கத்தில் முதன்முதலாக என்னிடம் வருபவர் பாத்திமாவே ஆவார்” என்றும் “இந்தச் சமுதாயத்திலே பாத்திமா, இஸ்ரவேலர்கள் சந்ததியில் தோன்றிய மரியம்(அலை) அவர்களைப் போன்றே திகழ்கின்றார்” என்றும் உத்தம நபி(ஸல்) அவர்கள் உயர்த்திக் கூறும் உயர் தன்மை பெற்றவர் தாம் மாதர்குல மாணிக்கமாகத் திகழும், மன்னர் நன்னபியின் மருகர் மறை புலி அலி(ரலி) அவர்களின் இல்லறத் துணைவியார் பாத்திமதுஜ்ஜஹரா(ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள்.

இத்தன்மையைதாய பெண்ணினத்தின் பொன்னாக பரிணமிக்கும் பாத்திமா நாச்சியார் அவர்களின் ஒப்புயர்வற்ற சீரிய வரலாற்றினை மிகச் சுருக்கமாகத் தெவிட்டாத தீந்தமிழில் தீட்டப்பட்ட நன்னூலே இந்நூல்.

எம்.ஆர்.எம்.முகம்மது முஸ்தபா அவர்கள் தாம் இந்நூலை தமிழுலகுக்கு வழங்குகிறார். நான் கண்ணுற்றவரை இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், இன்ன பிற விஷயங்கள் அனைத்தும் சரித்திர ஆதாரப்பூர்வமானவையாகவே இருக்கின்றன. சம்பவங்களை ஆசிரியர் தமக்கே உரித்தான தனி நடையில் கவர்ச்சியாக எழுதியிருப்பது விரும்பத்தக்கதே.

இந்நூல் குறிப்பாக, தமிழகத்தில் வதியும் முஸ்லிம் தாய்மார்களுக்கும், பொதுவாக தமிழ் பேசும் முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளுக்கும் மிகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

இவ்வாறு சென்னை பல்லாவரம் மதரஸா இஸ்லாமிய கல்லூரியின் முதல்வர் அப்துல் ஸமத் நத்வீ அவர்கள் 1958 ஆம் வருடம் தாம் எழுதிய அணிந்துரையில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண்கள் திலகம் பாத்திமா”

Your email address will not be published. Required fields are marked *