Skip to content

மென்மையான வாள்

180.00

ஆசிரியர் :நாகூர் ரூமி

பெருமானார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி அனேக நூல்கள் எழுதப்பட்டு விட்டன. இன்னும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஓர் அரசியல் தலைவராக, ஓர் இராஜதந்திரியாக அவர்கள் எப்படி இருந்தார்கள்; வாழ்நாளில் ஒருமுறைகூட மூன்று வேளையும் வயிறார உண்ணாத உன்னதத்  தலைவரை இந்த உலகம் கண்டது உண்டா. கைசர் களுக்கும், கிஸ்ராக்களுக்கும், ரோமானிய பாரசீக மன்னர்களுக்கெல்லாம் கிடைக்காத மரியாதை அவ்வளவு எளிய மனிதராக வாழ்ந்த அவர்களுக்கு எப்படி கிடைத்தது?தனக்காக உயிரைக் கொடுக்கும் ஒரு சமுதாயத்தை அவர்களால் எப்படி உருவாக்க முடிந்தது? அவர்களுடைய மேதை எவ்வாறு செயல்பட்டது? இந்தக் கோணத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் கூறுகளை பார்க்கும்ன நூல்கள் குறைவு.

இந்நூல் பெருமானாரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் காலவரிசைப்படி சொல்லிச் செல்லும் வரலாற்று நூல் அல்ல. மாறாக பெருமானாரின் அரசியல் பரிமாணத்தின் மீது மட்டும் கவனம் செலுத்தும் ஒரு முயற்சி.

அவர்களுடைய வெளியுறவுக் கொள்கைகள், உலகின் பல ஆட்சியாளர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்கள், செய்துகொண்ட உடன்படிக்கைகள், எழுதிய சாசனங்கள், அனுப்பிய தூதுக்குழுக்கள் இப்படி செல்லும் இந்நூல்.

முகம்மது நபி ஒரு கொடுங்கோலர், மோசமான அரசியல்வாதி என்று காட்ட ஓரியண்டலிஸ்ட்டுகள் என்று அறியப்படும் மேற்கத்திய உலகின் அறிஞர்கள் காலங்காலமாக முயன்றுள்ளனர். ஆனால் இந்த நூலை படிப்பவர்கள் முக்கியமாக முஸ்லிமல்லாதவர்கள் முகமது நபி அப்படிப்பட்டவர்கள் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்வார்கள்.

இவ்வாறு இதன் ஆசிரியர் நாகூர் ரூமி அவர்கள் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “மென்மையான வாள்”

Your email address will not be published. Required fields are marked *