“தேடி வந்து பழகுபவர்களைவிடத்
தேவைக்குப் பழகுபவர்களே
இங்கு அதிகமாக இருக்கிறார்கள்
இப்போதெல்லாம் பயன்படுத்தியபின்
எறிந்து விடுகிறார்கள் சில பொருட்களையும்
நிறைய மனிதர்களையும்
வேதனையைக் கூட
வேடிக்கையாகப் பார்ப்பவர்களே
இங்கு அதிகம்
இப்படி மனித நேயம் குறைந்து போய்விட்ட இன்றைய உலக இயல்பை வெளிப்படுத்திக் காட்டுகிறார் கவிஞர். இந்நூலில் அன்பு, அரவணைப்பு, பாசம், பரிதவிப்பு, நட்பு, காதல், துரோகம், புறக்கணிப்பு, ஏளனம், அவமானம், தன்னலம், தனிமை, போலிமை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், இழப்பு முதலிய பல பொருண்மைகளில் கவிதைகள் பொதிந்துள்ளன“ இவ்வாறு பேராசிரியர் முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் அவர்கள் இந்நூலைப் பற்றி கூறியுள்ளார்.





Reviews
There are no reviews yet.